Tuesday 6 December 2011

செல்வராகவனின் மயக்கம்தான் என்ன.....





மயக்கம் என்ன....






டைரக்டர் செல்வராகவன் 


           இந்த திரைப்படம் டைரக்டர் செல்வராகவனுடைய அழகான படைப்பு.  படத்தை பார்த்து முடிக்கும் போது படத்தில் இருந்த அமைதி ஒரு நாள் பொழுதாவது நம்மை கலைத்தது நிஜம். இந்த பாதிப்பை ஏற்படுத்திய தனுஷுக்கு பாராட்டு. தனுஷின் நடிப்பு திறன் படத்துக்கு படம் மெருகேறுகிறது என்பதும் உண்மை.



 First half of the film is commercial  about Love and second half is like an art film about Career.  

         இந்த படத்தை வெறும் திரைப்படமாக மட்டும் பார்த்தால் அருமை. அப்படி எத்தனை பேரால் பிரித்து பார்க்க முடியும்? பாடல்கள் படத்தின் கதையோடு ஒன்றி போயிருப்பது சமீபத்தில் வெளி வந்த படங்களில் இதில் மட்டும்தான் என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். 



  படம் முழுவதும் தண்ணியிலேதான்  (சத்தியமா தண்ணீரோ  , கண்ணீரோ இல்லை )  மிதக்கிறது....கலாச்சார சீரழிவு (Dating , Drinking , Flirting ) படத்தின் முதல் பாதியில் தலைவிரித்து ஆடுகிறது. டைரக்டர் ஒரு பேட்டியில் dating  க்கும் loving  க்கும் என்ன வித்தியாசம் என்பதை நமக்கு ஒரு class  வேறு எடுத்தார்.

             உழைப்பவனுக்கு உடல் வலி அது தீரத்தான் குடிக்கிறான் என்று சொல்லி சொல்லி அந்த வர்க்கத்தையே நம் சமுதாயம் நாசமாக்கிவிட்டது. youth  ன்னா இப்படிதான் dating போவது, தண்ணி அடிப்பது என்று formulate  பண்ணி இந்த தலைமுறையையும் கெடுத்து அடுத்த தலைமுறையையும் கெடுக்கிறார்கள்...ஆமாம் அடுத்து இவர்களின் குழந்தைகளின் DNA யை டெஸ்ட் பண்ணி பார்த்தால், nucleic acid  இருக்காது, ethanol  தான் இருக்கும்.

             நிஜத்தை எடுக்கிறேன் பேர்வழி என்று சின்ன சின்னதாக அங்கங்கே நடக்கும் விஷயங்களை பொதுவாகவே நடப்பதாக காண்பித்து சமுதாயத்தை சீரழிப்பதே திரைபடத்துறையின் பொழுது போக்காகிவிட்டது. 

             
              தலைப்புக்கும் கதைக்கும் இருக்கும் சம்பந்தம் என்ன என்றெல்லாம் நீங்கள் கேள்வி கேட்கக்கூடாது. அவங்க மயக்கத்தில் இருந்தாங்கன்னா மயக்கம் என்ன என்று பெயர் வைப்பார்கள்.... இல்லை, குழப்பத்தில் இருந்தாங்கன்னா குழப்பம் என்ன என்று பெயர் வைப்பார்கள்.....அது அவர்களின் இஷ்டம்.....  



திருவாளர் செல்வராகவன் 





"அடிடா அவள...உதடா  அவள...வெட்றா அவள...."

இந்த பாட்டை அண்ணனும் தம்பியும் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள்.

         திருவாளர் செல்வராகவன், உங்களுக்கு சோனியா அகர்வால் மேல கோபம் இருந்தால் அதை நீங்க பாட்டில சொன்ன மாதிரி  தனிப்பட்ட முறையில் தைரியம் இருந்தா  போய் செய்யுங்க  ... அதை விட்டுட்டு திரைப்படம் மூலமா தீத்துகிறது அவ்வளவா நல்லா இல்லை. திரைப்படம் என்பது அதை பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தக்கூடியது.

          ஆண்கள் எல்லோருமே காதல் தோல்வியால் பாதிக்கபடுவதாக நீங்கள் நினைப்பதை திரைக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். அப்படி பார்த்தால் திருமணம் என்ற பெயரில் ஆண்கள் பெண்களுக்கு செய்யும் துரோகங்களுக்கு (பத்து keeps வைத்துகொள்வது, ஒருத்தி இருக்கும் போதே இன்னொருத்தியை திருமணம் செய்வது, தான் பெற்ற பிள்ளைகுட்டிகளை நடுத்தெருவில் நிற்க வைப்பது,  வரதட்சணை என்ற பெயரில் பெண்களை கொடுமைபடுத்துவது...) பெண்கள் எல்லாம் சேர்ந்து ஆண்களை

 "அடிடா அவன...உதடா அவன...வெட்றா அவன..." 
என்று கிளம்பட்டுமா...

       சுருக்கமாக சொல்ல போனால், இந்த படம் செல்வராகவனின் இன்றைய தேதிவரை உள்ள வாழ்க்கை வரலாறு. முதல் பாதி சோனியா அகர்வால் செல்வராகவனிடம் ஏற்படுத்திய பாதிப்புகள் ....மீதி பாதி கீதாஞ்சலி கொடுத்த, கொடுத்து கொண்டிருக்கிற ஆறுதல்கள்....போதுமா மக்களே....இதுதான் செல்வராகவனுடைய மயக்கமும்  குழப்பமும்....  





Thursday 3 November 2011

Diwali Diyas and Crackers


Vela...Vela...Velayutham....Diwali Cracker




தீபாவளி வெடியான விஜய் யின் வேலாயுதம் பார்க்கலாம்...பார்க்கலாம்...பார்த்து பார்த்து ரசிக்கலாம்....

இந்த படத்தில் hero  introduction  scenes எல்லாம் நல்லாத்தான் இருந்தது. அந்த flow -லே படத்தை கொண்டுபோகாம வேட்டைக்காரன், சுறா படங்களை மாதிரி சம்பந்தமே இல்லாம ஒரு வில்லன் கதையை விஜய்க்காக வேண்டி எங்கிருந்துதான் உருவாக்கிறான்களோ தெரியவில்லை. முதல் சில காட்சிகளிலே  இருக்கிற இயல்பான சந்தோஷங்களையும் சிரிப்பையும் hero வும் தொலைத்து நம்மளையும் தொலைக்க வைக்கிறார். ஏன் அந்நியன் மாதிரி ஒரு கொலை வெறி...





கிராமத்து சேலை ஹன்சிகாவுக்கு நல்லாயிருக்கு. சரண்யா மோகனுடைய சிரிப்பும் விஜயின் சிரிப்பும் அழகாக match ஆகிறது. படத்தோட ஒட்டாத கதாபத்திரம் ஜெனிலியாதான். 


ஊர் உலகத்தில இருக்கிற தத்துவத்தை எல்லாம் சினிமா பாட்டிலே கேட்டாதான் நமக்கு அறிவு வரும்னு அந்த காலத்திலேயே பட்டுக்கோட்டையார் பாடிவச்சிருப்பார் போல. அதை விஜய் படத்தில மட்டும் தவறாம follow பண்றாங்க. ஆமா...ஆமா...நமக்கும் பழகிருச்சி...விட முடியவில்லை...  





               As  usual  music  and  dance  count...Kids craze for his movements and action in this film also.In this matter Vijay wont cheat. He fills out the needs of the producer, director and the audience. 
            Vijay ன்னா ஓடணும், சண்டை போடணும், டான்ஸ் ஆடணும், சட்டைக்கு மேல சட்டையா இரண்டு சட்டை போடணும் - இதெல்லாம் rules and regulations.

We like Vijay in Tata Docomo Ad than Jos Allukas. 

             
 Really a mass entertainer...





7am arivu......Diwali Diya



            Film with a different genre. Big hands to A R Murugadass for taking such an effort. The docu about Bodhidharma is etched out very well and Suriya suits very well.  The articles we read in net gives more info about this man.

             He could have include some more scenes of Bodhidharma. Because after seeing the legend on screen, the present generation hero is shown as a worthless one working in a circus company..hard to digest...We can be very well satisfied with Bodhidharma documentary instead of seeing a dummy replacement of the great man. 



                Sruthi Hassan replica of her father, Kamal Hassan in his youth - expressions, lively eyes, diction....Lots to improve...



                   Suriya looks good as the saint and martial arts expert. His postures, body language and his sedative and expressive eyes talks a lot as Bodhidharma. He again proves himself as a good actor.



               The Great Villain Johnny Tri Nguyen came all the way from Vietnam is good. He who gives the story a speedy move. Whatever effort the villain puts, the hero and heroine struggle to make an impact. The story fails to capture the audience in the second half. So many loop holes,  lacking focus on the plot, too much hype, borrowed Hollywood items like DNA, mind control, martial arts.... 

Not much impressive....           

Monday 17 October 2011

கோ - The Real King




கோ படம் வந்த புதிதில் படம் நல்ல இருக்குன்னு நிறைய பேர் சொன்னாங்க. ஆனா, எனக்கு அதை பாக்கணும்ன்னு தோணவே இல்லை.  காரணம் என்னவென்றால்,
  • ஜீவாவாலே strong character பண்ண முடியும் நான் நம்பவில்லை.
  • ஏதாவது ஒரு profession கையில்  எடுத்து அதை கடித்து குதறுவதை சில டைரக்டர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் ( காக்கி சட்டையை என்ன பாடுபடுத்துகிறார்கள் )


 நிறைய recommendationsக்கு பிறகு ரொம்ப லேட்டாக (அதுக்காக 5 மாதம் எல்லாம் ரொம்ப ஓவர் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது...சரி, சரி...விடுங்கள்...) பார்த்தேன்.





இந்த கதைக்காகவும், photojournalism என்கிற தொழிலை வெகு  லாவகமாக கையாண்டதற்கும்,  இதை இயக்கிய விதத்திற்காகவும்   டைரக்டர் கே வி ஆனந்துக்கு "கோ" பட்டம் கொடுக்கலாம். யாரையுமே overact பண்ணவிடாம balance பண்ணி இருக்கிறார். முக்கியமாக ஜீவாவையும் பிரகாஷ் ராஜையும்....
அடுத்தது ஹாரிஸ் ஜெயராஜின் மியூசிக்....its a hit...


டைரக்டர் K V Anand




நம்ம heros கதைக்கு வருவோம். இந்த படத்தில்தான் ஜீவா சரியாக, casual ஆக, பாத்திரத்திற்கு தகுந்தார் போல் நடித்திருக்கிறார். இரண்டு heroines கிட்டேயும் ஒரே மாதிரி look கொடுக்காமல், வித்தியாசப்படுத்தியிருக்கார். நிறைய  ஹிரோகள் செய்யிற தப்பு அதுதான். கடைசியில் 'நான் உன்னை லவ் பண்ணல்ல...அவளத்தான் லவ் பண்ணினேன்...'என்று சொல்லி நம்மையும் சேர்த்து குழப்புவார்கள்.....





அடுத்தது அஜ்மல்... பெரும்பாலும் character names எல்லாம் என் தலையில் நிக்கவே நிக்காது...ஆனால்  வசந்தன் என்கிற character  nameயை பதிய வைத்திருக்கிறார். அந்த character யை  அழகாகவும் தோரணையோடும்  செய்திருக்கிறார். 





கார்த்திகா அவங்க அம்மா ராதாவை போல் நல்ல உயரம்,  அதே முகஜாடை. ராதாவுக்கு நடிக்க தெரியாது, நளினம் கிடையாது, வெறும் celluloid பொம்மைதான் , ஆனால்  கார்த்திகா ஒகே.
Spring hair பியா பரவாயில்லை. எல்லா படத்திலேயும் ஒரே மாதிரி நடிப்பு பாணி தெரியுது. மாத்திக்கலாம்.


கதையோட க்ளைமாக்ஸ் தான் உண்மையான ஹீரோ. 


மீடியா, பத்திரிகைகள் எல்லாம் இன்று உண்மையை தொலைத்து, creativity என்ற பெயரில் கற்பனையாகவும் கட்டு கதைகளாகவும் எழுதுவது மட்டும் அல்லாமல், paid news போன்றவற்றையும் செய்யும் போது, ஜர்னலிசத்தின் மூலம் நாட்டுக்கு நல்லதும் செய்ய முடியும் என்று காட்டபட்டிருக்கிறது.  


அரசியல், காவல் துறை, மிலிடரி  போன்றவற்றில் இருப்பவர்கள் மட்டுமே நாட்டுக்கு நல்லது  செய்வதாக அனேக படங்களில் பார்த்திருக்கிறோம். நாம் சாதாரணமாக நினைக்கும் போடோக்ராபர் மற்றும் ஜர்னலிஸ்ட் தொழிலில் இருப்பவர்கள்கூட நாட்டுக்காக தன் அர்ப்பணிப்பை அளிக்க முடியும் என்று அழகாக உணர்த்தியிருக்கிறார்கள்.


இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை பெரும்பாலானோர் விரும்புகிறோம்.  இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு பழைய கிழ பெருச்சாளிகளை, வாரிசு அரசியலை  ஒழித்து, நல்ல ஜனநாயகம் நாம் நாட்டுக்கு அமையாதா என்று கூட தோன்றுகிறது.


Really the word கோ means  







Saturday 15 October 2011

Chocolaty Boy and Charming Girl





Melodious music, dandling dancers and amazing places behind make this song dazzling and pleasurable....

Thursday 28 July 2011

ஆரண்ய காண்டம்


ஆரண்ய காண்டம்



தியாகராஜன் குமாரராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’ நம் தமிழ் சினிமா உலகிற்கு ஒரு வித்தியாசமான கோணத்தை கொடுத்திருக்கிறது. அவருடைய முதல் படம் இதுதான் என்பது ஒரு ஆச்சரியம். பிற மொழிகளில் இருந்து சுட்ட கதை என்பது தெளிவாக தெரிந்தாலும் கதை கோர்ப்பு நன்றாக வந்திருக்கிறது.

Director Thiagarajan Kumararaja

 இந்த படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், போதை மருந்து விற்கும் கும்பலை பற்றியது. அந்த கும்பலில் இருக்கும் கொஞ்சம் நல்ல மனம் படைத்தவர்கள், நிறைய கெட்ட குணம் உடையவர்கள், இந்த கும்பலை சேராத வாழ்ந்து நொடிந்து போன ஒரு தகப்பனும் மகனும், கும்பலின் தலைவனிடத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் ஒரு அபலை பெண், அவளால் மையலில் பிறகு துப்பாக்கியால் விழ்த்தபடும் ஒன்றும் அறியாதவனாய் காட்டப்படும் ஒரு வாலிபன் இவர்கள்தான் கதையை நிர்ணயிக்கிறவர்கள்.

இந்த கதை, அது நடைபெறுவதாக காட்டப்படும் களம், அதில் நடைபெறும் தூப்பாக்கி சண்டைகள், வன்முறைகள், ஆபாசமான வசனங்கள் அனைத்துமே நம் மண்ணிற்கு சொந்தமானது இல்லை. பலதரப்பட்ட வட்ட வட்டமான DVD-களில் இருந்து copy அடிக்கப்பட்டவை. Mexican Hat மட்டும்தான் missing....



பரவாயில்லை... படம் பண்ணியவர்களை மன்னிக்கலாம்....எதற்காக என்றால்,
  •        தமிழ் சினிமாவிற்கு இந்த களம் புதிது. துணிந்து இந்த கதையை படமாக்கியதற்கு SP Charan க்கு பாராட்டுகள்.
  •       தியாகராஜன் குமார ராஜாவை சும்மா சொல்ல கூடாது. நிறைய தைரியம் வேண்டும் நம் தமிழ் சினிமாவில் ஒரு ஆணை நிர்வாணமாக காண்பிப்பதற்கு.தமிழ் நடிகர்களை அப்படி காண்பிக்க முடியாத கட்டாயதால்தான் ஜாக்கி ஷேராப்பை இறக்குமதி செய்திருக்கிறார் போல. MGR தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளை கேமராவுக்கு காட்டும் விதம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.  இப்படி நம் சினிமாவில் தொன்றுதொட்டு புழக்கத்தில் இருந்த பெண்ணை மட்டுமே அரை நிர்வாணமாக்கி காட்டும் Gender Bias இனியாவது சற்று ஒழியும் என்று நம்புவோம்.
  •        கிளைக்கதைகள் நிறைய இருந்தாலும் அதை கோர்த்திருக்கும் முறை அருமை.
  •  இதில் ஏகப்பட்ட பேர் நடித்திருந்தாலும் சம்பத் ராஜ், நொடிந்துபோன ஜமிந்தாராக வரும் சோமசுந்தரம், அவரது மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் வசந்த் ஆகியோருடன் மட்டுமே நம்மால் கதையோடு ஒன்றி போக முடிகிறது.
  •   சமுதாயத்திற்கு கேடு செய்பவர்களிடத்தும் நல்லதும் கெட்டதும் உண்டு என்றும் அதிலேயும் கெட்டவர்கள் தண்டிக்கபடுவார்கள் என்றும் சொல்லபட்டிருக்கிறது.


24 மணி நேரத்தில் சென்னையில் ஒரு போதைமருந்து விற்கும் கும்பலில் நடக்கும் கதையாக கண்பிக்கபட்டாலும் அதில் விறுவிறுப்புக்காக வன்முறையை அளவுக்கதிகமாக சேர்த்திருக்கிறார்கள். ஆபாச வசனங்களையும் சற்று குறைத்திருக்கலாம். மற்றபடி its a good attempt and as usual the debut film becomes a master piece.....







Tuesday 19 July 2011

Hit Song from 'Puthiya Mannargal'

By chance I hear this song in FM radio. I stunned by the music and the voice. Got an urge to see the scene and search and find out . It is from the movie 'Puthiya Mannargal' starring Vikram, Mohini... But in this song there is no Vikram but Mohini present.Music scored by A R Rehman. The pair hits the screen in a pompous way. It rocks.


Watch it....




Monday 18 July 2011

திரைச்சீலை - ஒரு கண்ணோட்டம்

திரைச்சீலை


நூலும் தறியும்


ஓவியர் ஜீவா  

ஓவியர் ஜீவா எழுதிய ‘திரைச்சீலை’ என்ற இந்த நூல் இந்திய தேசிய விருது 2011இல் திரைப்படத்தைப் பற்றி சிறப்பாக எழுதபட்டமைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. திரைபடத்தின் உலக வரலாறு, இந்திய வரலாறு பற்றி பல கோணங்களில் அலசப்பட்டு உள்ளது. திரைப்பட துறையின் வளர்ச்சி எவ்வாறு இயக்குனர்கள், கதாசிரியர்கள் மற்றும் நடிகர்கள் போன்றவர்களால் வளர்க்கப்பட்டு உள்ளது என்றும், ரசிகர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.

இந்த புத்தகத்தில் பல அத்தியாயங்களில் தனிப்பட்டு ஒரு திரைப்படத்தையும், சில அத்தியாயங்களில் பல திரைப்படங்களை ஒரு சேரவும் அலசி இருக்கிறார். மொத்தமாக சுமார் அறுபது அத்தியாயங்களை எழுதியதாக தகவல். அவற்றுள் முப்பத்தி ஒன்பது மட்டுமே இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது. மற்ற அத்தியாயங்களையும் படிக்கும் ஆர்வம் இதை படித்தபிறகு நமக்கு ஏற்படுகிறது.

பொழுதுபோக்கு அம்சமான சினிமாவை எப்படி பார்க்க வேண்டும், படத்தில் சொல்லப்பட்டுள்ள கதையை  எப்படி தரம் பிரித்து பார்ப்பது, அதை எப்படி உள் வாங்கிக் கொள்வது, நிஜ வாழ்க்கையில் எப்படி அதை பிரதிபலிப்பது என்பதையெல்லாம் தெளிவாக இந்நூலில் கூறியிருக்கிறார். 

திரைப்படங்களை நாம் வெறும் பொழுது போக்குக்காக மட்டுமே பார்ப்பது, அதில் நடித்திருக்கும் நடிகர்களை மட்டுமே பிரமாண்டபடுத்துவது போன்ற மனப்பான்மை தவறு என்றும் புரிய வைத்திருக்கிறார். நடிகர்கள்( சிவாஜி உட்பட) இயக்குனர்களால் எப்படி செதுக்கபடுகிறார்கள்? எப்படி திரையில் அதை காட்டுகிறார்கள்? என்பதை தெளிவாக்கி இருக்கிறார்.


ஆசிரியர் ஜீவா :

ஆசிரியர் ஜீவா (Sketched by me)

      
முதலில் இந்த அருமையான நூலின் ஆசிரியரான ஜீவா அவர்களை பற்றி பார்ப்போம். ஜீவா அவர்கள் படித்ததேன்னவோ வழக்கறிஞர் ஆவதற்கு தான். செய்யும் தொழிலோ ஓவியம் வரைவது. தீவிரமான பொழுது போக்கு திரைப்படம் பார்ப்பது. அவரின் திரைப்பட அனுபவத்தைத்தான் இந்த புத்தகத்தில் நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் எழுத்தாளராக இல்லாமல் ஓவியராக இருப்பதால் இந்த புத்தகத்தை ஓவியமாக எழுதி இருக்கிறார்.

சிறு வயதிலிருந்து அவர் பார்த்த, பார்க்க மறந்த, அனுபவித்த, உணர்ந்த அத்தனை திரைப்பட விவரங்களையும் நம்மிடையே பகிர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட நூற்றிஎண்பத்து மூன்று(183) வெளிநாட்டு திரைப்படங்களை இந்நூலில் பட்டியலிட்டு உள்ளார்.


அவரின் திரை அனுபவம் பற்றிய கட்டுரைகள் இலக்கிய இதழான ‘ரசனை’ மாத இதழில் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கிறது. அதன் தொகுப்புதான் இந்த அரிய புத்தகம். 2004ஆம் வருடத்திலிருந்தே எழுதப்பட்டிருக்கும் 

இந்த கட்டுரைகளில் அவரின் கண்ணோட்டத்தில், சிந்தனையில், விமரிசிக்கும் திறனில் எந்த மாறுதலும் இல்லாமல் ஒரே சீராக, கோர்வையாக விமரிசிக்க அவரால் முடிந்திருக்கிறது. இதுவே அவருக்கு தேசிய விருதினை பெற்று தந்திருக்கும் என்று தோன்றுகிறது. அவரின் எழுத்து நடையும், அதில் இடையிடையே தொனிக்கும் நையாண்டிகளும், படங்களை குறித்த அவரின் யதார்த்தமான பார்வையும் இந்த நூலுக்கு அழகு சேர்த்திருக்கிறது.


என்னுரை :


       புத்தகத்தை படிக்க திறந்தேன். படித்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் எல்லோரும் பாராட்டும் அளவிற்கு என்னதான் இருக்கிறது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் உந்த முதல் இரண்டு நாட்கள் எந்த நேரமும் திரைச்சிலையும் நானுமாக இருந்தேன். குருவி தலையில் பனங்காயை வைத்தமாதிரி உணர்ந்தேன். ஏன் என்பது புரிந்தது...இந்த புத்தகம் சிறுகதை தொகுப்போ, குறு நாவலோ, நெடுங்கதையோ அல்ல. ஒரே நாளில் படித்துமுடிக்க.....ஒரு சினிமா ரசிகன் சினிமாவை, தான் வாழ்ந்த, வாழ்கிற நாட்களில் எப்படி உள்வாங்கி கொண்டான் என்பதை குறித்த நூல் இது.
     
நான் சாதாரணமானவள். சினிமா என்பது என்னை பொருத்தவரை வெறும் திரையில் தெரியும் வண்ண பொம்மலாட்டம். அதன் பின்புலமோ அதன் ஆக்கசக்தியோ எனக்கு தெரியாது இப்புத்தகம் நிறைய அறிவுபூர்வமான விசயங்களை உள் அடக்கியது. ஒரே நாளில் படித்து முடிக்க வேண்டிய நூல் அல்ல இது என்பது புரிந்தது. நிதானப்படுத்தினேன்.....




மதிப்புரை :

பொதுவாகவே ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு திரைபடத்தையும் முழு கதையோடு விமரிசித்து உள்ளார்.
தி ரெட் வயலின்’ படத்தை குறிப்பிடும் போது, உயிரற்ற பொருட்களை மையப்படுத்தி எத்தனை படங்கள் உலக அளவில் வெளிவந்திருக்கிறது, அவற்றை யார் யார் இயக்கியது என்றெல்லாம் வரிசைப்படுத்தி விட்டு கதைக்குள் செல்கிறார். கதை சொல்லி முடித்தவுடன் அதை அலசியிருக்கிறார். இதே பாணியை நூலின் எல்லா அத்தியாயங்களிலும் காணலாம்.
நகைசுவைப் படங்களை விமரிசிக்கும் போது ஒரே படத்தை மட்டும் கையாளாமல் அநேக படங்களையும் அதன் விவரங்களையும் பதித்திருக்கிறார்.

ஆவணப் படங்களைப் பற்றி குறிப்பிடும் போது, சமுக நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களை அழகான தமிழில் விமரிசித்திருக்கிறார். இதில் ‘ராமையாவின் குடிசை’ என்ற ஆவணத்தை முன்னிறுத்தி இருக்கிறார்.

      ‘பதேர் பாஞ்சாலி’ படத்தின் விமரிசனத்தையும் சத்யஜித் ராயின் போராட்டங்களையும் படித்த போது இத்தனை தகவல்களை இவர் எங்கிருந்து திரட்டினார் என்று நம்மை ஆச்சிரியபடுத்துகிறார் ஆசிரியர். Frame by frame ஆக அதை சொல்லி இருக்கும் விதம் நேர்த்தி.

பேசும் படங்கள் தோன்றிய காலத்தில், நடிகர்கள் முழு ஒப்பனையுடன் பாடிக் கொண்டிருக்க வாத்திய கோஷ்டி கேமரா பார்வைக்கு வெளியே இசைத்து கொண்டிருப்பார்கள்’ என்ற விவரங்கள் புதுமை.


சிவாஜியை பற்றி குறிப்பிடும் போது, ஆசிரியர் உயர்ந்திருக்கிறார் தன் எழுத்தால். அதில் உரைநடையின் போக்கு ஒரே சீராக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு கருத்தை இரு வேறு இடங்களில் குழப்பாமல் அழகாக எழுதியிருக்கும் விதம் நேர்த்தி. தமிழின் மேல் நமக்கு பற்று ஏற்படுத்துகிறது.

கதாசிரியரும் நகைச்சுவை நடிகரும் ஆன ஸ்ரீநிவாசனை பற்றி குறிப்பிடும் போது ‘சோ’ -வை நினைவுபடுத்துகிறார்.

'சைக்கிள் டிக்கெட்’ என்று இரு வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார். அதை சரியாக விளக்காதது, தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

     ‘மாயா தர்ப்பன்’ படம் பார்த்த அனுபவத்தை – ஆப்ரேட்டர் ரீல்களை மாற்றி போட்டு மன்னிப்பு கேட்டது, மாற்றி போட்டதை தெரிந்து கொள்ளமுடியாத தெளிவில்லாத திரைக்கதை  – படித்த போது சிரித்தேவிட்டேன்.

     ‘தி பியானிஸ்ட்’ போன்ற போர் சம்மந்தப்பட்ட படங்களையும் ‘தி ரோடு ஹோம்’ போன்ற புரியாத படங்களையும் பார்ப்பதற்கு பொறுமை மிக அவசியம். ஆசிரியர் ஜீவாவிற்கு அது அதிகம். இவர் விமரிசனம் எழுதுவதற்காக படங்களை பார்க்கவில்லை. தான் பார்த்தவற்றை விமரிசித்திருக்கிறார்.

வன்முறை படமான ‘சிட்டி ஆப் காட்’ கதையை படித்த போது அந்த படத்தில் இருக்கும் வன்முறை காட்சிகள் நம் கண்முன் விரிகின்றன.

நான் இவ்வளவு நாள் சார்லி சாப்ளினை ஒரு நகைச்சுவை நடிகனாகதான் பார்த்திருக்கிறேன். என்னை மாதிரி நிறைய பேர் இருப்பார்கள். இவரின் கருத்துகளை படித்த பிறகுதான் சாப்ளின் எடுத்த ஒவ்வொரு படத்திற்கு பின்னும் ஒரு நோக்கம் ஒளிந்திருக்கிறது என்று. ‘மாடர்ன் டைம்ஸ்’ படத்தை பார்த்திருக்கிறேன். இந்த கோணத்தில் நினைத்து பார்ப்பது இதுவே முதல் தடவை.
Hats Off to the Author...


மாற்று கருத்து :

     Movies won’t get changed. Our perspective towards life gets changed from time to time....இது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்த நூலில் விமரிசிக்கப்பட்ட பெரும்பாலான படங்கள் எல்லாமே கலை பார்வையுடன், யதார்த்தமான வாழ்வை சித்திகரிக்ககூடிய – dry subject films - படங்களாகவே இருக்கிறது. ஆசிரியருடைய ரசனையும் அதை சார்ந்தே இருக்கிறது. இந்த மாதிரி படங்கள்தான் நல்ல தரமான படங்கள் என்று இவர்களுக்கு எல்லாம் யார் சொல்லி கொடுத்தது என்று தெரியவில்லை.

ஜனரஞ்சகமான எந்த படத்தையும் அவர் விமரிசிக்காதது வருத்தம் அளிக்கிறது. அந்த மாதிரி படங்களை அவர் படமாகவே ஏற்றுக்கொள்ளவில்லையோ தெரியவில்லை. அவையும் சமுதாயத்திற்கு ஓர் அளவிற்கு தேவைபடுகிறது. நாள் முழுவதும் உழைத்து சலித்த மக்களுக்கு பொழுது போக்காக, தன்னால் செய்ய முடியாததை கதாநாயகன் செய்து, அவர்களை ஒரு போலி உலகத்துக்குள் இழுத்து சென்று சந்தோஷபடுத்தும் குதூகலமும் மனிதனுக்கு தேவைபடுகிறது. அதை செய்யும் படங்கள் நம் நடைமுறை வாழ்க்கைக்கு மிக அவசியமான ஓன்று என்பது என் கருத்து.


திரைச்சீலை :

இந்த நூலின் மூலம் ஆசிரியர் பல உலக மொழிகளில் வெளியான படங்களை நமக்கு அறிமுகபடுத்தி, நளினமான தமிழில் கதைகள் சொல்லி, திரைப்படத்தை பகுத்தறியும் யுக்தியை நமக்கு சொல்லி கொடுத்து, திரை உலகை பற்றி நமக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தி இருக்கிறார்.

     அவர் நெய்து கொடுத்த இந்த திரைச்சீலையின் வழியாக நாமும் இனி வரும் திரைப்படங்களை பார்த்து ரசிப்போம்.    
  

Sunday 26 June 2011

Avan Ivan - A Rustic Movie

அவன் இவன்



Director Bala  :
                         


                     படம் காமெடி என்றுதான் எங்களுக்கு பேட்டிகளில் சொல்லி இருக்கீங்க. ஆனால் படம் முழுக்க ஒரு strain தெரியுது. அது காமெடி ஆகட்டும், சீரியஸ் சீன் ஆகட்டும் கஷ்டப்பட்டு படம் பண்ணியதும், எங்களை கஷ்டப்படுத்தி படம் பார்க்க வைத்திருப்பதும் தெரியுது. விஷாலையும் ஆர்யாவையும் கூட ரொம்ப படாபடுத்தி இருக்கிறார். அவர்கள் இருவரும் casual ஆக நடிக்கவே இல்லை. 



GM Kumar :




                      படத்தில் அழகாக, அமைதியாக நடித்திருப்பவர் GM Kumar மட்டும்தான். அவருடைய hair style அந்த கதாபாத்திரத்திற்கு suit ஆகிறது. 


Movie :

                     படத்தில் பாட்டு நல்லா இருக்கு. விஷாளோட squint eyes நல்லா இருக்கு.  விஷால் ஆடுற முதல் டான்ஸ் நல்லா இருக்கு. ஆர்யா இந்த படத்தில் பரவாயில்லை.
                    படத்தில் வரும் கதாநாயகி ஜனனி ஐயர் பரவாயில்லை. நடிக்க தெரிந்திருக்கிறது. 
                     படம் ரொம்ப rustic , அழுக்காகவும்,  அலங்கோலமாகவும் இருக்கிறது. முதல்ல வர்ற இரண்டு காட்சிகளில் வரும் வசனங்களை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
                    விஷால் சில சமயங்களில் உச்சரிக்கும் ' Highness' என்னும் வார்த்தை convent english உச்சரிப்பில் இருக்கிறது.
                    பொம்பளைகளை முக்கால் நிர்வாணமாக காண்பித்து முடித்து விட்டார்கள். இப்போது ஆண்களின் turn... அவர்களை முழு நிர்வாணமாக பார்த்து தொலைக்கவேண்டிய கட்டாயம் நமக்கு. காட்சிக்கு தேவையாக இருந்தாலும், its an embracing scene...


                    மொத்தத்தில் அவனும் நல்லா இல்ல....இவனும் நல்லா இல்ல...
இல்ல பாக்கிற நாம தான் நல்லா இல்லையான்னு தெரியல்ல...







Saturday 25 June 2011

பாடலின் இனிமை

                        சில பாடல்களை பாடிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும். அன்று முழுவதும் அந்த பாட்டையே முணுமுணுத்துக் கொண்டே இருப்போம். அதில் ஒன்றுதான் நாணயம் பட பாடல் 'நான் போகிறேன் மேலே மேலே..'






                          இந்த பாடல் காட்சியும் ஒரு அழகான கவிதை போல்...பிரசன்னா ஓகே...அந்த கதாநாயகி - பெயர் தெரியவில்லை - not ok... But அந்த white and red dress ரொம்ப அழகு...அந்த பாடல் காட்சிக்கு நல்லா பொருத்தமாக இருந்தது....